இலங்கையின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்குடாத் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று 04.02.2019ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றன.
இதன்டிப்படையில் கோறளைப்பற்று மத்தி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் ஆட்டோ பேரணியை நடாத்தியதுடன், வாழைச்சேனை புகையிரத நிலைய சந்தியில் சுதந்திர தின நிகழ்வுகளை அதன் தலைவரும் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான கே.எல்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.
இதே வேளை, கல்குடா ஆட்டோ சாரதிகள் சங்கமும் கல்குடாத்தொகுதி ஐக்கிய ஆட்டோ சாரதிகள் சங்கமும் இணைந்து அதன் தலைவர்களான எம்.புஹாரி மற்றும் எம்.எஸ்.எம்.சபீர் ஆகியோரது தலைமையில் நடாத்திய ஆட்டோப்பேரணி ஓட்டமாவடியிலிருந்து ஆரம்பமாகி வாழைச்சேனையூடாக ஓட்டமாவடி பிரதேச சபையைச் சென்றடைந்தது.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment