போதைப்பொருளை ஒழிப்பதற்கு இந்நாட்டின் இராணுவத்தினர் பயன்படுத்த வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Monday, February 4, 2019

போதைப்பொருளை ஒழிப்பதற்கு இந்நாட்டின் இராணுவத்தினர் பயன்படுத்த வேண்டும்

71 வது தேசிய தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி ஆட்டோ சாரதிகள் சங்கம் இலங்கையின் சகல இன மக்களும் சகல உரிமைகளும் பெற்று சௌபாக்கியத்துடன் வாழ வேண்டுமென்ற தொனிப்பொருளில் தேசிய தின நிகழ்வை இன்று வாழைச்சேனை புகையிரத சந்தியில் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் தலைமையுரை நிகழ்த்திய கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் கே.எல் அஸ்மி, இந்நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த முப்படையினருக்கும் தனது நன்றியைக் கூறியதோடு, இந்நாட்டில் தற்போது இடம்பெற்று வருகின்ற போதைப்பொருளை ஒழிப்பதற்கு இந்நாட்டின் இராணுவத்தினர் பயன்படுத்த வேண்டுமென இந்நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினயமாக வேண்டுவதாக தனது 71வது சுதந்திர தின செய்தியாக வெளியிட்டார்.

அத்துடன், கல்குடா ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் அன்சார் மௌலவி அவர்கள் பேசுகையில், காத்தான்குடியில் பொலிஸாரிடம் போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பாக முறையிட்ட பாடசாலை மாணவனை போதைப்பொருள் வியாபாரிகள் அம்மாணவனின் கை கால் உடைக்கப்பட்டதற்கு தனது கவலையை வெளியிட்டார்.
இந்நாட்டில் சகவாழ்வுடனும் சமாதானத்துடனும் சகல இன, மதத்தினரும் வாழ வேண்டும். இதனை இஸ்லாம் அலகுர்ஆனில் யாப்பு போன்று கூறியுள்ளதெனத் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ஆட்டோ சாரதிகளுக்கான முச்சக்கர வண்டி நிறுத்துவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது .

இங்கு பிரதம அதிதி கலந்துகொண்டு உரையாற்றிய கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைத்தவிசாளர் ஷோபா ரஞ்சித், எமது நாட்டில் சிறுபான்மையினர் பூரணமான சுதந்திரத்தை இன்னமும் பெறவில்லையென்றும், நாம் இலங்கையர் என்ற பொதுச்சிந்தனை எம்மில் வர வேண்டுமென்ற நற்செய்தியைத் தெரிவித்தார்.

இச்தேசிய தின நிகழ்வில் மகிந்த லங்கா தேரோ மற்றும் சகல இன மதக்குருக்களும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிவில் சமூகப்பொறுப்பதிகாரி ஜெயசிங்க, வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களாக எம்.பீ.எம்தையீப், எம்.என் நபீரா ஆகியோரும் பங்குபற்றினர்.

ஓட்டமாவடிசெய்தியாளர் முஹம்மது சதீக்

No comments:

Post a Comment