இலங்கையின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச சபை ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு பிரதேச சபை முன்றலில் இன்று (04.02.2019) திங்கட்கிழமை இடம் பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதேச சபையின் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம், உதவித்தவிசாளர் யூ.எல்.அஹமட் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்களும் உத்தியோகத்தர்களும் மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் ஏ.எல்.அலியார் மற்றும் மீனவர் சங்கத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு பிரதேச சபையின் தவிசாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன், பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதப்பெரியார்களால் போதனைகளும் வழங்கப்பட்டன.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment