சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, February 2, 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினராள் நேற்று (01) கல்பிடி, சின்னப்பாடு கடல் பகுதியில் வைத்து தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அங்கு அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தடை செய்யப்பட்ட வலைகள், நான்கு டிங்கி படகுகளும் கடற்படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது. 

அதன் படி கைது செய்யப்பட்ட நபர்கள், சட்டவிரோத வலைகள், நான்கு படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த மாதத்தில் பல்வேறு பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட வலைகள் பெரிதளவில் கண்டெடுக்கப்பட்டது, மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் பெரிதளவில் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment