ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்மொழியப்பட்ட விடயங்களை எதிர்க்கட்சி திசை திருப்ப முயற்சி செய்கின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இவ்வாறு எதிர்க்கட்சியினர் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்காக இனவாதத்தை தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அவ்வாறு அவர்கள் கூறுவதை போல அரசாங்கம் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது நாட்டை பிளவுபடுத்தும் எந்த ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடவில்லை என கூறினார்.
மேலும் கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பானது நாட்டை ஐக்கிய படுத்தும் முயற்சியாக கொண்டுவரப்படுகின்றது, ஆனால் இந்த ஆவணம் நாட்டை பிளவுபடுத்தும் என்று வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் அவர்கள் முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாக தெரிவித்த அமைச்சர், சில குழுக்கள் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றன என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
அத்தகைய குழுக்கள் சிங்கள சமுதாயத்தின் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளிளும் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளும் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.
No comments:
Post a Comment