ஏறாவூர் விபத்தில் விரிவுரையாளர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 31, 2019

ஏறாவூர் விபத்தில் விரிவுரையாளர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (31.01.2019) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் ஒருவர் இஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளுடன் தனியார் பிரயாணிகள் பஸ்வண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. பஸ் வண்டியின் சாரதி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்

மட்டக்களப்பு - செங்கலடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 50 வயதுடைய கந்தக்குட்டி கோமலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி முச்சக்கர வண்டியொன்றை முந்திச்சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுயுள்ளது. 

இச்சம்பவம் இடம்பெற்றமை அருகிலிருந்த வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் காலை 7.15 மணிக்கு பதிவாகியுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்தவரது உடற்பாகங்கள் சிதறியுள்ளன. சடலம் உடல்கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment