படைப்புழுவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து நாளை முதல் மதிப்பீடு - விவசாயத் திணைக்களம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 16, 2019

படைப்புழுவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து நாளை முதல் மதிப்பீடு - விவசாயத் திணைக்களம்

படைப்புழு தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலான மதிப்பீட்டை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் இந்த மதிப்பீட்டு நடவடிக்கையை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ​பேராசிரியர் எம்.டபிள்யூ. வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

மதிப்பீட்டுப் பணிகளுக்காக பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் குழு நியமிக்கப்படும் எனவும் விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ​பேராசிரியர் எம். டபிள்யூ. வீரக்கோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

படைப்புழுவின் தாக்கம் சோளப் பயிர்ச் செய்கையையே அதிகளவில் பாதித்துள்ளது. சோளப் பயிர்ச் செய்கையைத் தொடர்ந்து கீரி சம்பாவை அதிகம் தாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஏனைய பயிர்ச் செய்கைகளையும் இது பாதிக்கலாம் என்பது தொடர்பில் விவசாயிகள் அவதானமாக இருக்க வேண்டும். 

விசேடமாக நெற் செய்கையைப் பாதிக்கும். இந்த அழிவு தொடர்பிலும் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவது எவ்வாறு என்பது தொடர்பிலும் இரண்டு கிழமைக்குள் விவசாயிகளை அறிவுறுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். இந்த அழிவு தொடர்பில் முழுமையான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கும் எதிர்பார்த்துள்ளோம். 

ஒவ்வொரு ஊடகங்களிலும் தெரிவிக்கப்படும் தகவல் மாறாக உள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதியிலிருந்து இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் என விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் எம்.டபிள்யூ. வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment