அரசாங்க பாடசாலைகளில் 2019 ஆம் ஆண்டுக்கான தரம்-1க்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு இன்று - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 16, 2019

அரசாங்க பாடசாலைகளில் 2019 ஆம் ஆண்டுக்கான தரம்-1க்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு இன்று

அரசாங்க பாடசாலைகளில் 2019 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு இன்று 17ஆம் திகதி நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் நடத்தப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபத்தை கல்வியமைச்சு சகல மாகாண கல்விச் செயலாளர்கள் பணிப்பாளர்கள் வலயக் கல்விப்பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளது.

முறையாக வகுப்புகளை ஆரம்பிக்கும்போது இருவேறு நிகழ்ச்சிகளை கட்டாயம் நடத்தவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய சிறார்கள் பெற்றோர்கள் மற்றும் அதிதிகளை

வரவேற்கும் நிகழ்வை நடத்துதல். அதன்போது தேசிய மற்றும் பாடசாலைக் கொடிகளை ஏற்றல் தேசியகீதம் மற்றும் பாடசாலைக் கீதம் என்பனவற்றை இசைத்தல்.

இரண்டாவது புதிய மாணவர்களை வரவேற்பதற்காக ஆரம்பக் கல்விப் பிரிவு மாணவர்களின் பொருத்தமான கலை நிகழ்சியொன்றையும் நடத்துதல் வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய இந்நிகழ்வில் பெற்றோருக்கு முதலாந்தரகலைத்திட்டம் தொடர்பில் அறிவூட்டல் செய்யப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment