வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான முழு விபரம் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 29, 2018

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான முழு விபரம்

வடக்கின் 5 மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 38,739 குடும்பங்களை சேர்ந்த 119,962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1, 528 குடும்பங்களைச் சேர்ந்த 4,906 பேர் இடம்பெயர்ந்து 19 இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி மாவட்டத்திலேயே 74,730 பேர் அதிகளவாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 2,322 குடும்பங்களைச் சேர்ந்த 7,286 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பிரதேசத்தில் 542 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 5,285 குடும்பங்களைச் சேர்ந்த 16,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1, 265 குடும்பங்களைச் சேர்ந்த 807 பேர் 3 தற்காலிக முகாம்களில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அப்பிரதேசத்தில் 82 வீடுகள் முழுமையாகவும் 1, 681 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 331 குடும்பங்களைச் சேர்ந்த 1004 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 7 தொழில் முயற்சிகள் அழிவடைந்துள்ளன. 

கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 1,719 குடும்பங்களைச் சேர்ந்த 5,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பிரதேசத்தில் 4 வீடுகள் முழுமையாகவும் 73 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் 439 குடும்பங்களைச் சேர்ந்த 1,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வெலி ஓயா பிரதேச செயலக பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலக பிரிவில் 11,326 குடும்பங்களைச் சேர்ந்த 35,202 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 791 குடும்பங்களைச் சேர்ந்த 2,508 பேர் 6 இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அப்பிரதேசத்தில் வெள்ளத்தால் 350 வீடுகள் முழுமையாகவும், 759 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 

கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 7,865 குடும்பங்களைச் சேர்ந்த 25,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 370 குடும்பங்களைச் சேர்ந்த 1,272 பேர் 4 தற்காலிக முகாம்களில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் வெள்ளத்தால் 33 வீடுகள் முழுமையாகவும், 789 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 

பூநகரி பிரதேச செயலக பிரிவில் 2,775 குடும்பங்களைச் சேர்ந்த 6,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர் , தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் வெள்ளத்தால் 3 வீடுகள் முழுமையாகவும் 530 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 

பச்சிளைப்பளை பிரதேச செயலக பிரிவில் 2, 218 குடும்பங்களைச் சேர்ந்த 7, 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அப்பிரதேசத்தில் வெள்ளத்தால் 145 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

மன்னார் பிரதேச செயலக பிரிவில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

நானாட்டன் பிரதேச செயலக பிரிவில் காற்றின் தாக்கத்தால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம், மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 4,257 குடும்பங்களைச் சேர்ந்த 12 ,642 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டு 6 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தற்காலிக முகாமில் தங்கியுள்ளனர். 

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 155 குடும்பங்களைச் சேர்ந்த 526 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டு 23 குடும்பங்களைச் சேர்ந்த 71 பேர் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். அத்துடன் குறித்த பிரதேசத்தில் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment