திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று கெப்பித்திகொல்லேவ, துடுவெவ பகுதியில் குடை சாய்ந்ததில் 6 பேர் காயமடைந்துள்ளதாக கெப்பித்திகொல்லேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் - திருகோணமலை வீதியின் 13 ஆவது கிலோ மீட்டர் பகுதியில் இந்த விபத்து நேற்று (03) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற வானிலை காரணமாக வேகமாக பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கெப்பித்திகொல்லேவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment