நுவரெலியா – தலவாக்கலை வீதி மூடல் – மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 28, 2018

நுவரெலியா – தலவாக்கலை வீதி மூடல் – மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

தலவாக்கலையிலிருந்து சமர்செட் வழியாக நுவரெலியா செல்லும் பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் 100 வருடங்களுக்கு மேல் பலம்வாய்ந்த இரும்பு பாலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இதனால் அவ்வீதியினூடாக கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இப்பாலத்தை அமைப்பதற்கு போடப்பட்டிருந்த அடித்தளத்தில் பாரிய கற்கள் வெடிப்புற்று காணப்படுவதோடு, பாலம் அபாயகரமான நிலையில் இருக்கின்றது
இதற்கு மாற்று வழிப்பாதையாக ரதல்ல குறுக்கு வீதியை பயன்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறிய வாகனங்கள் பயணிக்கலாம் எனவும், எனினும் மிகுந்த அவதானத்துடன் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வீதி புனரமைப்பு பணிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

க.கிஷாந்தன்

No comments:

Post a Comment