தமிழ், சிங்கள மக்களுக்கிடையில் ஒற்றுமையும் சமத்துவமும் ஏற்படக்கூடிய முக்கிய காலகட்டம் இதுவென்பதால், இச்சந்தர்ப்பத்தை தவறவிடாமல் தமிழ்த் தலைமைகளும் தமிழ் மக்களும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி சுப்பிரமணியம் சுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரான சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள மக்களுக்கிடையில் ஒற்றுமையும் சமத்துவமும் ஏற்படக்கூடிய முக்கிய காலகட்டம் தற்போது உருவாகியுள்ளது. கடந்த 70 வருடங்களுக்கு முன்னர் செல்வநாயகம் முன்வைத்த உடன்படிக்கை முறிவடைந்ததன் காரணமாகவே 'புலிகள்' உருவாகினார்கள்.
இதனால் இடம்பெற்ற கசப்பான உணர்வுகளை நாம் மறக்க வேண்டும். தற்போது உருவாகியுள்ள சிறப்பான சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதற்காக தமிழ் மக்கள் அனைவரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என்றும் சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார்.
No comments:
Post a Comment