அண்மையில் நாடாளுமன்றில் இடம்பெற்ற அமைதியற்ற நிலையை தடுக்க சபாநாயகர் கரு ஜயசூரிய விரும்பவில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நாடாளுமன்றில் அமைதியற்ற நிலை ஏற்பட்டபோது கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு சபாநாயகரை நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே கோருகிறார். இல்லாவிட்டால் யாரேனும் ஒருவர் உயிரிழக்கலாமென்றும் கூறுகிறார். எனினும், சபாநாயகர் அமைதியாக இருப்பதைப் போன்ற காணொளியொன்றை ஷெஹான் சேமசிங்க இன்று ஊடகங்களிடம் காண்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு வாசுதேவ நாணயக்காரவும் கோருகிறார். அதனையும் சபாநாயகர் நிராகரிப்பதைப் போன்ற காணொளியொன்றையும் ஷெஹான் சேமசிங்க ஊடகங்களுக்கு காண்பித்தார்.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு செய்யவுள்ளதாக குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment