இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
92 ஒக்டைன் பெற்றோல் வகைகள் 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில் இருந்த 145 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டீசலின் விலை 7 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, டீசலின் புதிய விலை 123 ரூபாவில் இருந்து 116 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முச்சக்கர வண்டிகளுக்கு சிறிய விவசாய இயந்திரங்களுக்கும் பயன்படுத்தப்படும் 2T லிகிசி எரிபொருள் உள்ளிட்ட லிகிசி ஒரு லேட்டரின் விலை 10 ரூபாவினாலும் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகின்றது.
இதனுடன் எரிபொருளின் விலையை தீர்மானிப்பதாக மாதாந்தம் முன்னெடுக்கப்படவிருந்த விலை சூத்திரத்திற்கு பதிலாக நடைமுறையிலான விலை முறை முன்னெடுக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment