நாடாளுமன்றத்தில் குழப்பநிலையை ஏற்படுத்த எமக்கு விருப்பமில்லை என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் வைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதென்பதை மஹிந்த ராஜபக்ஷ நிரூபிக்க வேண்டும் என்பதே ஐக்கிய தேசிய முன்னணியின் ஒரே நிலைப்பாடாகும்.
பொதுத் தேர்தலில் அவருக்கு மக்கள் ஆணை கிடைக்கவில்லை. அவர் புதிதாக பிரதமர் பதவியை ஏற்றவர். நாடாளுமன்றில் ஜனநாயகத்தைப் பேணும் நாடுகளில், அவருக்கு பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
நாடாளுமன்றம் நாளை கூடவுள்ளது. பிரேரணையொன்றை கொண்டுவந்து பெரும்பான்மை இருக்குமெனில், அதனை நிரூபிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் குழப்பநிலையை ஏற்படுத்த எமக்கு விருப்பமில்லை.
பெரும்பான்மையை நிரூபியுங்கள், இரண்டு தடவைகளும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக 85 உறுப்பினர்களே வந்தனர். ஆகவே, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
பெரும்பான்மை இன்றி பிரேரரணையை வெற்றி கொள்ள முடியாதல்லவா?“ என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment