மஸ்கெலியா – கினிகத்தேனை பகுதியில் நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அத்தோடு நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பத்து லட்சம் கையொப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
மஸ்கெலியா – கினிகத்தேனை நகர பஸ் நிலையத்திற்கு அருகில் அம்பகமுவ பிரதேச சபையின் தலைவர் ஜெயசங்க பெரேரா தலைமையில் குறித்த நடவடிக்கைகள் இன்று (29) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் சரியான தீர்வை பெற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு நாடாளுமன்ற தேர்தலை நடத்தும்படி வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். இதனைத்தொடர்ந்து தேர்தலை வலியுறுத்திய மனுவில் கையொப்பமிடும் நடவடிக்கையும் இடம்பெற்றது.
No comments:
Post a Comment