மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக்கல்லூரியில் ஷரீஆப்பிரிவில் 5ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் முகம்மது ஜவ்பர் றஸ்மி அக்ரம் அல்குர்ஆனை முழுவதையும் பத்து மாதத்தில் மனனம் செய்து முடித்துள்ளார்.
குறுகிய காலப்பகுதியில் குர்ஆனை மனனம் செய்து முடித்த காவத்தமுனையைச் சேர்ந்த முகம்மது ஜவ்பர் றஸ்மி அக்ரமுக்கு கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.இஸ்மாயீல் மதனி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறனர்.
No comments:
Post a Comment