நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றிலிருந்து 2.0796 kg ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின், வெள்ளவத்தை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (17) இரவு 8.45 மணி அளவில் கொட்டாஞ்சேனை, பரடைஸ் மைதானத்திற்கு அருகில் வைத்து குறித்த காரை சோதனையிட்டபோது இவ்வாறு ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனையடுத்து, போதைப்பொருளுடன் குறித்த காரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தார். குறித்த ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி ரூபா 2 1/2 கோடிக்கும் அதிகமென கணக்கிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், 33 வயதான கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை இன்றைய தினம் (18) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி ஏழு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான உத்தரவைப் பெற உள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார். வெள்ளவத்தை பிரிவு குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment