பொகவந்தலாவ லொய்னோன் தோட்டப்பகுதி ஆற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை (30) மாலை சிறுவனொருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆற்றுப் பகுதியில் விவசாய தோட்டத்திற்கு வரிச்சிவகை மரக்குச்சிகளை வெட்டுவதற்காக சென்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆற்று பகுதிக்கு சென்ற சிறுவனை காணவில்லை என தோட்ட பொதுமக்களும் உறவினர்களும் நீண்ட நேரமாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் குடியிருப்புக்கருகாமையிலுள்ள ஆற்றில் சடலம் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைமீட்டு பொகவந்தலாவ பிரதேசவைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். சடலமாக மீட்கபட்ட சிறுவன் 17 வயது இராதாகிருஷாந்தன் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிறுவனின் தாய் கொழும்பில் தொழில் புரிந்து வருவதாகவும் தந்தையின் பாராமரிப்பில் இந்தச் சிறுவன் வளர்ந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது
சம்பவ இடத்திற்கு வரவழைக்கபட்ட தடயவியல் பொலிஸார் இது கொலையா? அல்லது தவறிவிழுந்ததில் சிறுவன் உயிரிழந்தாரா? என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment