கொழும்பு - தலைமன்னார் ரயில் சேவை நாளை மீண்டும் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 31, 2018

கொழும்பு - தலைமன்னார் ரயில் சேவை நாளை மீண்டும் ஆரம்பம்

கொழும்பு கோட்டைக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான ரயில் சேவையை விரைவில் ஆரம்பிப்பது பற்றி ரெயில்வே திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

தலைமன்னாருக்கும், மதவாச்சிக்கும் இடையிலான பகுதியில் இரண்டு பாலங்களை மீளமைப்பதற்காக ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

பால மீளமைப்பு பணிகள் பூர்த்தியாகி இருப்பதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெரேரா தெரிவித்தார்.

நாளை பாலங்களை பரிசீலித்த பின்னர், மாலை தொடக்கம் மீண்டும் ரயில் சேவையை தொடங்கக்கூடியதாக இருக்குமென பொதுமுகாமையாளர் நம்பிக்கை வெளியிட்டார்.

மன்னாருக்கும், முருங்கனுக்கும் இடையிலான பழைய பாலம் மீளமைக்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த ஹிரிகொன் நிறுவனம் பழைய பாலத்தை அப்புறப்படுத்தி புதிய பாலத்தை அமைத்திருந்தது. இந்த பாலம் நாளை ரயில்வே திணைக்களத்திடம் சம்பிர்தாயபூர்வமாக ஒப்படைக்கப்படும்.

No comments:

Post a Comment