வௌிநாட்டு சிகரட்டுக்களை நாட்டுக்கு கடத்தி வந்த இரண்டு இலங்கை பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (31) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 பக்கட்டுக்கள் அடங்கிய 72 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றில் சுமார் 14,500 சிகரட்டுக்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட வௌிநாட்டு சிகரட்டுக்களின் பெறுமதி சுமார் 725,000 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களின் பயணப் பொதியில் இருந்து அவை கைப்பற்றப்பட்டுள்ளன.
பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 மற்றும் 30 வயதுடைய இரண்டு பேரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment