தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தடையாக விளங்குவதாக வட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் குற்றம் சாட்டியுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சிவஞானம் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதன்போது சபையில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “எமது மக்களுக்குரிய தீர்வைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையில் நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தோம். ஆனால் அத்தீர்வை ஏற்படுத்துவதற்கு தற்போது தடையாக இருப்பவரே ஜனாதிபதி தான்.
அவர் தன்னால் தனது கட்சி பாதிக்கப்படக் கூடாது என்பதால் தன்னுடைய கட்சியைக் காப்பாற்றுவதற்காக செயற்பட்டு வருகின்றார்.
இந்நாட்டில் மீண்டுமொருமுறை இனவாதத்தை தூண்டும் வகையில் இனவாதப் போக்குடனேயே அவர் செயற்படுகிறார். ஆகவே நாங்கள் கவனமாகச் செயற்பட வேண்டி இருக்கின்றது. நல்லாட்சி என்று கூறி எமது ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசு எமது நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment