ஜனாதிபதி கொலைச் சம்பவம் : DIG நாலக டி சில்வாவின் குரல் மாதிரியை பெற்றுக் கொள்ள நீதிமன்றம் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 27, 2018

ஜனாதிபதி கொலைச் சம்பவம் : DIG நாலக டி சில்வாவின் குரல் மாதிரியை பெற்றுக் கொள்ள நீதிமன்றம் உத்தரவு

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் குரல் மாதிரியை அரச இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் பதிவு செய்து கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக அரச இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் அவரின் குரல் மாதிரியை பெற்றுக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக நீதிமன்ற உத்தரவுப்படி ஊழலுக்கு எதிரான படையணியின் பணிப்பாளர் நாமல் குமார குமாரவின் குரல் மாதிரி இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் பதிவு செய்து கொள்ளப்பட்டது. 

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா உடனான தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவகள் சில, ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவினால் அண்மையில் வௌியிடப்பட்டிருந்தது. 

சம்பவம் தொடர்பில் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பல தரப்பினரிடமிருந்தும் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment