விமான நிலையத்தில் தங்க மோதிரங்களுடன் ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, September 27, 2018

விமான நிலையத்தில் தங்க மோதிரங்களுடன் ஒருவர் கைது

தங்க மோதிரங்கள் 10 உடன் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டிகாவத்த பகுதியை சேர்ந்த 44 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று (27) அதிகாலை 2 மணியளவில் குறித்த நபர் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்து விமான நிலையத்தில் இருந்து வெளியில் செல்ல முற்பட்ட சந்தர்பத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவருடைய சட்டைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த மோதிரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

17,98,980 ரூபா பெறுமதியான 299.80 கிராம் நிறையுடைய 10 மோதிரங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment