கல்கிஸ்ஸ - ரம்புக்கனை விசேட சொகுசு ரயில் சேவை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 27, 2018

கல்கிஸ்ஸ - ரம்புக்கனை விசேட சொகுசு ரயில் சேவை ஆரம்பம்

சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை நிறைவேற்றும் முகமாக, சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து, புதிய விசேட சொகுசு ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சொகுசு ரயில் சேவை, நாளாந்தம் காலை 8.30 மணிக்கு கல்கிஸ்ஸவில் இருந்து ஆரம்பமாகி, கொழும்பு - கோட்டையின் ஊடாக ரம்புக்கனையைச் சென்றடையும். 

மீண்டும் மாலை 4.10 மணிக்கு ரம்புக்கனையிலிருந்து இதே வழியின் ஊடாக கல்கிஸ்ஸவை நோக்கிப் பயணிக்கும் என, இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த விசேட சொகுசு ரயில் சேவையில், ஒரே நேரத்தில் நூறு பேர் பயணிக்க முடியும் என்றும், கோட்டை மற்றும் வெயாங்கொடை ரயில் நிலையங்களில் மாத்திரமே இந்த ரயில் சேவை நிறுத்தப்படும் என்றும், ரயில்வே திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த விசேட சொகுசு ரயில் சேவை, ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ. ஏ. காதிர் கான் 

No comments:

Post a Comment