உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அதிகரிக்கவுள்ள தொலைபேசி கட்டண கொடுப்பனவு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 27, 2018

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அதிகரிக்கவுள்ள தொலைபேசி கட்டண கொடுப்பனவு

மத்திய மாகாண  உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொலைபேசி கட்டணக் கொடுப்பனவை 500 ரூபாவால் அதிகரிக்க மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தீர்மானித்துள்ளார்.

மத்திய மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தினால் அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்கும் இதுதொடர்பாகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்திலுள்ள பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தற்போது 1000 ரூபாய் தொலைபேசி கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருகின்றது.

இதனை மேலும் 500 இல் அதிகரிக்க மாகாண முதலமைச்சர் அனுமதி வழங்கி உள்ளார். இருந்த போதும் இப் பணத்தை குறித்த சபைகளே செலுத்த வேண்டியுள்ளதால் அச்சபைகளது மாதாந்தக் கூட்டத்தில் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்து அனுமதியை பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி உறுப்பினர்களது தொலைபேசிக் கட்டணம் தற்போது 1000 ரூபாவில் இருந்து 1500 ரூபாவாக அதிகரித்துக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment