பிதுரங்கல புகைப்பட விவகாரம் தொடர்பில் உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு பிரதமர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 27, 2018

பிதுரங்கல புகைப்பட விவகாரம் தொடர்பில் உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு பிரதமர் தெரிவிப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பிதுரங்க மலையில் அரைநிர்வாண புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் சேர்த்த இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த செயலின் பின்னணியில் இருந்த நபர்கள் யார் என்பதை கண்டுபிடிக்குமாறு பிரதமர் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்ததாகவும், தேவைப்படும் பட்சத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பை நாடுமாறு கேட்டுக் கொண்டதாகவும் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிதுரங்கல மலையுச்சியில் அரை-நிர்வாணக் கோலத்தில் தம்மைப் படம் பிடித்து, அதனை சமூக வலைதளங்களில் சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூன்று இளைஞர்களை சீகிரிய பொலிசார் கைது செய்துள்ளனர். 

இவர்கள் மூவரும் கலேவல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள். 19 வயதிற்கு உட்பட்டவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.றுவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் விடுத்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய செய்திக்கு
https://www.newsview.lk/2018/09/blog-post_639.html

No comments:

Post a Comment