ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி கையாண்ட அணுகுமுறையைப் பாராட்டுகின்றேன் - அமைச்சர் பைஸர் முஸ்தபா புகழாரம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 27, 2018

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி கையாண்ட அணுகுமுறையைப் பாராட்டுகின்றேன் - அமைச்சர் பைஸர் முஸ்தபா புகழாரம்

நியூயார்க்கில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கான 73ஆவது அமர்வின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த மூன்று வருடங்களில் இலங்கையை ஒரு மனிதாபிமானமிக்க சமுதாயமாக மாற்றுவதற்கு மேற்கொண்ட படிமுறைகளை சபை உறுப்பினர்களிடம் விளக்கிக் கூறினார்.

மேலும் அவர் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலகத்திற்கு, பலஸ்தீன மக்களின் உரிமைகளை கையாள்வதில் இதேபோன்ற அணுகுமுறையை எடுக்குமாறும் வலியுறுத்தினார். மக்கள், ஊடகம் மற்றும் நீதித்துறை சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்துவதில் இலங்கை மிக நீண்ட தூரம் பயணித்திருக்கின்றது என்றும் அவர் கூறினார். 

இலங்கை எப்பொழுதும் பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தே வந்திருக்கின்றது, வருங்காலங்களில் பலஸ்தீன மக்களுக்கு தீர்வு காண்பதில் வினையூக்கியாக இருப்போம் என எமது தலைவர் உறுதியளித்தார். 

ஜனாதிபதி அவர்களின் தைரியமான சிந்தனையை பாராட்டுகின்றேன், தொடர்ந்தும் அவருடன் நெருக்கமாக பணியாற்றி பலஸ்தீன மக்களின் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

மினுவாங்கொடை நிருபர் 

No comments:

Post a Comment