பெருந்தொகை நகைகளை கொள்ளையடித்த திருடன், அதனை காப்பாற்றிக் கொள்ள கடவுளுக்கு காணிக்கை கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மொரட்டுவ பகுதியில் பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டில் 30 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கொள்ளையடித்த சந்தேக நபர் கல்கிஸ்ஸ பொலிஸாரினால் 6 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் குறித்த வர்த்தகரின் சாரதியாக பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வர்த்தகரின் வீட்டில் பாதுகாப்பாக இருந்த 16 லட்சம் மற்றும் 15 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. அத்துடன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமரா கட்டமைப்பின் ஒரு பகுதியும் திருடி செல்லப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது திருடப்பட்ட நகைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.
திருடப்பட்ட சில நகைகள் மோதரயிலுள்ள ஆலயம் ஒன்றில் காணிக்கையாக செலுத்தியுள்ளார். திருடப்பட்ட நகைகளை பாதுகாக்க வேண்டி அவ்வாறு செய்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
No comments:
Post a Comment