பர்பசுவல் ட்ரேஷரிஸ் நிறுவனம் (Perpetual Treasuries Ltd) மீது மத்திய வங்கியினால் விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று 05ம் திகதி முதல் பர்பசுவல் ட்ரேஷரிஸ் நிறுவனத்திற்கான தடை மேலும் நீடிக்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி அந்த நிறுவனத்திற்கு மேலும் ஆறு மாத காலத்திற்கு முதன்மை விநியோகஸ்தராக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவ்அறிக்கையில் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தினை இடைநிறுத்தத்தினை நீடித்தல், பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க,
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2018 யூலை 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்ச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் ஆறு மாத காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது.
No comments:
Post a Comment