ஒரு தொகை இரத்தினக் கற்கள், தங்க பிஸ்கட்களுடன் இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, June 29, 2018

ஒரு தொகை இரத்தினக் கற்கள், தங்க பிஸ்கட்களுடன் இருவர் கைது

உகண்டாவைச் சேர்ந்த 63 வயது நபர் ஒருவரிடமிருந்து 858 மாணிக்கக் கற்களை மீட்டுள்ளதாக, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (30) காலை துபாயிலிருந்து கட்டுநாயக்கா விமானம் நிலையம் வந்த விமானத்தில் (EK 652) வந்த குறித்த நபரை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து சிறிய வகை 858 நீல மாணிக்கக்கற்கள் மீட்கப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் பணிப்பாளரும் ஊடக பேச்சாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட குறித்த சந்தேகநபர், விசாரணைகளின் பின்னர் ரூபா 30 ஆயிரம் அபராதத் தொகை செலுத்துமாறு பணிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதோடு, மாணிக்கக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, சுங்க திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
இதேவேளை சுமார் 20 இலட்சம் ரூபா மதிப்புடைய தங்க பிஸ்கட்களை கடத்தி வந்த இலங்கையர் ஒருவரும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

37 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 03 தங்க பிஸ்கட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு கூறியுள்ளது.

No comments:

Post a Comment