புதிய ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்றையதினம் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளவுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ட்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்போது இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களாக பலர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். பதவிப்பிரமாண நிகழ்வின் பின்னர் அனைத்து கெபினட் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் முன்னிலையில் உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று அமைச்சரவையின் 18 அமைச்சுக்கள் மறுசீரமைக்கப்பட்டதுடன் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்தநிலையில் இன்று முற்பகல் ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment