பொத்துவிலில் உள்ள அனைத்து வாசிகசாலையிலும் தினக்குரல் பத்திரிகையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தினக்குரலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருக்கோணமலை பாடசாலை ஒன்றில் குறிப்பிட்ட சில தமிழ் சகோதரர்களினால் அண்மையில் இடம்பெற்ற ஹபாயா சம்மந்தமான செய்தி ஒன்றினை வைத்து நாட்டில் வாழும் அனைத்து தமிழ் முஸ்லிம்களின் ஒற்றுமையை இல்லாதொலித்து இனவாதத்தை தூண்டும் அளவிற்கான செய்தி ஒன்று தினக்குரல் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
இச் செய்தியினை வெளியிட்டிருந்ததையடுத்து கிழக்கின் சில பிரதேசங்களில் இத் தடை விதிக்கப்பட்டிருந்தது, இத் தடை நேற்று பொத்துவிலிலும் விதிக்கப்பட்டுள்ளது.
பொத்துவிலில் உள்ள பிரதான வாசிகசாலை உட்பட 4 வாசிகசாலைகளில் தினக்குரல் பத்திரிகையை பயன்படுத்த உடனடியாக தடை விதிப்பதாக பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித் அவர்கள் தெரிவிக்கின்றார்.
MSA. வாஸீத்
தவிசாளர்
பொத்துவில் பிரதேச சபை.
No comments:
Post a Comment