ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினர் மேற்கொண்டு வரும் பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்புக்கு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் கே.எல்.இப்ராஹீம் (அஸ்மி) தனது சொந்த நிதியிலிருந்து சுமார் இருபதாயிரம் ரூபாய்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கிளையினர் பிரதேச பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நன்மைகருதி பஸ் வண்டியொன்றைக் கொள்வனவு செய்து வழங்கும் நோக்கில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பல்வேறு நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடரில், தொண்டு நிறுவனங்கள், நலன்விரும்பிகள், தனவந்தர்களிடம் எமது நிதி சேகரிப்புத்திட்டத்திற்கு உதவுமாறு கோரிக்கைகளை முன் வைத்ததன் பேரில், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித்தேர்தலில் பிறைந்துறைச்சேனை-மாவடிச்சேனை போட்டியிட்ட அஸ்மி அவர்கள் தேர்தல் முடிந்த பிற்பாடு தன்னால் முடிந்த உதவியை வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தார்.
இதன் பிரகாரம், கடந்த 11.05.2018ம் திகதி வெள்ளிக்கிழமை மாவடிச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாக சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வில் வைத்து எமது பஸ் கொள்வனவுத்திட்ட கணக்கில் இருபதாயிரம் ரூபாய்களை வைப்பிலிட்டமைக்கான பற்றுச்சீட்டினை ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஏ.எம்.ஹலீம் இஸ்ஹாக் அவர்களிடம் கையளித்தார்.
எமது வேண்டுகோளையேற்று குறித்த பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு உதவியளித்தமைக்காக கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் கெளரவ கே.எல்.இப்ராஹீம் (அஸ்மி) அவர்களுக்கு பாடசாலையின் சார்பாகவும் கட்டார் பழைய மாணவர் சங்க கிளையினர் சார்பாகவும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதே நேரம், இப்பணியை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கொண்டு நிறைவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளதால் பிரதேச, உள்ளூர் தனவந்தர்கள்,நலன்விரும்பிகள் தம்மாலான நிதியுதவிகளை வழங்கி எமது பிரதேச பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தேவையை நிவர்த்தி செய்ய உதவுமாறும் பங்களிப்புகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
பழைய மாணவர் சங்க கட்டார் கிளை
ஓட்டமாவடி தேசிய பாடசாலை
hehotline.lk
No comments:
Post a Comment