அனுராதபுர மாவட்டத்தில் வாழும் சமுர்த்தி பெறும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பத்தாயிரம் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
'சிப்-தொர' புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மாதாந்தம் ஆயிரத்து 500 ரூபா புலமைப்பரிசில் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தமது பாடசாலைகளின் ஊடாக இதற்கான விண்ணப்பப்படிவங்களை அனுப்ப முடியும். இத்திட்டத்தின் கீழ் முதல் நான்கு மாதத்திற்கான கொடுப்பனவை ஒரே முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment