“தனியார்துறையினர் இலஞ்சம் பெறுவதையும் குற்றமாக அறிவிக்கும் வகையில் இலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது சம்பந்தமாக ஆராயப்பட்டுவருகின்றது” என்று இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்தார்.
“தனியார் துறையினர் இலஞ்சம் பெறுவதையும் குற்றமாக அறிவிக்கும் வகையில் இலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது சம்பந்தமாக ஆராயப்பட்டுவருகின்றது” என்று இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்தார்.
இன்டர் நியூஸ் நிறுவனமும், நாடாளுமன்ற ஊடகவியலாளர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு வத்தளையிலுள்ள பெஹர்சஸ் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று விளக்கமளிக்கையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள்மீது பலகோணங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. ஆனால், அதற்குள் என்ன நடக்கின்றது, அந்த கட்டமைப்பு எவ்வாறு இயங்குகின்றது என்பது குறித்து எவரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை.
அதற்குரிய வளங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு அழுத்தம் கொடுப்பதில்லை. நெத்திலி மீன்களே பிடிபடுகின்றன. சுறாக்கள் சிக்குவதில்லையெனவும் விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. ஆனால், சுறாமீன்களுக்கு எதிராக எவரும் உரியவகையில் முறைப்பாடுகளை முன்வைப்பதில்லை.
இலஞ்ச, ஊழல் சட்டம் நீண்டகாலமாக திருத்தப்படாதுள்ளது. 1954ஆம் ஆண்டே சட்டம் கொண்டுவரப்பட்டது. 1994ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில் அதன்பின்னர் இற்றைவரை திருத்தம் இடம்பெறவே இல்லை. ஹொங்கொங், சிங்கபூர், மலேசியா போன்ற நாடுகளில் இவ்வாறில்லை. காலத்துக்கேற்ற வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்.
எனவே, மேற்படி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யப்படும்வேளையில் தனியார்துறையினர் இலஞ்சம் வாங்குவதையும் குற்றமாகக் கருதும் வகையில் சரத்துகள் உள்ளடக்கப்படுவதே சிறந்தது. அதுபற்றி ஆராயப்பட்டுவருகின்றது.
அதேவேளை, இலஞ்ச, ஊழல் விசாரணைக்குழுவில் 200 விசாரணை அதிகாரிகள் மாத்திரமே இருக்கின்றனர். இவர்களில் பட்டதாரிகள், கணக்காய்வாளர்கள் இல்லை. ஹொங்கொங்கில் 1,200 அதிகாரிகள் இருக்கின்றனர். அதைவிட சனத்தொகை அதிகமாகவுள்ள நம்நாடடில் 200 பேர். ஆகவே, புதிதாக 200 பேரை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. அதில் முதற்கட்டமாக 50 பேர் விரைவில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.
இலஞ்ச ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளமைக்கு அது தொடர்பாக வழக்குகள் நீதிவான் நீதிமன்றத்தினூடாக விசாரிக்கப்படுவதேயாகும். எதிர்காலத்தில் அதனை மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அரச ஊழியர்கள் இலஞ்சம் பெறுவதே சட்டத்தில் குற்றமாக இருக்கின்றது. ஆனால், தனியார்துறையினரும் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டும். இதனால் தனியார்துறையினர் இலஞ்சம் பெறுவதையும் குற்றமாக்கும் வகையில் சட்டம் திருத்தப்படவுள்ளது” – என்றார்.
No comments:
Post a Comment