நாவலடி ரஹ்மத் நகரைச்சேர்ந்த வறிய குடும்பமொன்றுக்கு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் AG.அஸீஸுல் றஹீம் முயற்சியில் கூரைத்தகடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச சபை உறுப்பினர் AG. அஸீஸுல் றஹீமின் வேண்டுகோளுக்கிணங்க இதற்காக 15000 ரூபாய் நிதியுதவியை நாவலடி CIC நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த குடும்பத்திற்கான கூரைத்தகடுகள் இன்று 13.05.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பினர் AG. அஸீஸுல் றஹீமினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் AG. அஸீஸுல் றஹீம் அவர்களுடன், CIC நிறுவனத்தின் செயலாளர் AMM. ஹாலித், ஹாலித் பின் வலீத் பள்ளிவாயல் செயலாளர் AM. றிஸ்வான், நாவலடி கிராம அபிவிருத்திச்சங்கம் மற்றும் அந்நூர் ஜும்ஆப்பள்ளிவாயல் செயலாளர் AB. காதர் முஹம்மத், பொருளாளர் AM. சுபைதீன், ரஹ்மத் நகர் பெளஸுல் அமீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தனது வேண்டுகோளையேற்று குறித்த மனிதாபிமான உதவியைச் செய்து தந்தமைக்காக CIC நிறுவனத்தின் முகாமையாளர் AM. நியாஸ் மற்றும் அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
றிஸ்வான் இப்றாஹீம்
No comments:
Post a Comment