தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கான கோரிக்கை ஒன்றை அகில இலங்கை தனியார் பேருந்து சம்மேளனம் முன்வைத்துள்ளது.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதற்கு இணையாக பேரூந்து கட்டண அதிகரிப்பதை எதிர்பார்ப்பதாக அகில இலங்கை தனியார் பேருந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறைந்த பட்ச பேரூந்து கட்டணம் 15 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்கிழமைக்கு முன்னர் குறித்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எதிர்வரும் புதன் கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் ஸ்ரான்லி பெர்ணாண்டோ தெரிவித்தார்.
No comments:
Post a Comment