புதிய மாற்றங்களுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு லெபனானில் பாராளுமன்ற தேர்தல் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 6, 2018

புதிய மாற்றங்களுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு லெபனானில் பாராளுமன்ற தேர்தல்

கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு லெபனான் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. இன்று இரவு அல்லது நாளை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இஸ்ரேல், சிரியாவை அண்டை நாடாக கொண்ட லெபானானில் கடைசியாக 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதன்பின்னர், பிராந்திய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரண்டு முறை பாராளுமன்றத்திற்கு நீடிப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்னர் இன்று பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

128 இடங்களுக்கான வாக்குப்பதிவு சற்று நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது. பல்வேறு மாற்றங்களுடன் இம்முறை தேர்தல் நடப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு, எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்களும் வாக்களிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வசிக்கும் லெபனானில் தற்போது அதிபராக மிச்சேல் அவுன் இருந்து வருகிறார். சமீபத்தில் பிரதமராக இருந்த சாத் ஹரிரி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சவூதியில் தஞ்சமடைந்தார். பின்னர், சில மாதங்களில் அவர் நாடு திரும்பினார்.

லெபனானின் முக்கிய அரசியல் மற்றும் போராளிகள் இயக்கமான ஹெஸ்புல்லா, தங்களுக்கு அதிக இடங்களை மக்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி விடும் இதனால், இன்று இரவு அல்லது நாளை யார் வெற்றி என்பது தெரியவந்துவிடும்.

No comments:

Post a Comment