ஓட்டமாவடி அறபாத்தின் “நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்” அறிமுக விழா - News View

About Us

About Us

Breaking

Sunday, May 6, 2018

ஓட்டமாவடி அறபாத்தின் “நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்” அறிமுக விழா

எழுத்துலகில் புகழ்பெற்ற பிரபல எழுத்தாளர் பன்னூலாசிரியர் ஓட்டமாவடி அறபாத்தின் “நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்” நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் ஏறாவூர் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர் EEDI கல்வி நிறுவனத்தில் நேற்று 5ம் திகதி சனிக்கிழமை மாலை வாசக வட்டத்தின் தலைவர் முகம்மட் ஸப்ரி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலை, இலக்கியச் செயற்பாட்டாளர் எம்.ஸப்ரி தலைமையுரையும், வரவேற்புரையும் நிகழ்த்தியதோடு., அறபாத்தின் எழுத்துலகம் பற்றிய அறிமுகத்தை மூத்த எழுத்தாளரும், முன்னாள் வட- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மக்கத்துச் சால்வை புகழ் எஸ்.எல்.எம்.ஹனீபா நிகழ்த்தினார்.
அத்தோடு, நூல் விமர்சனத்தை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் த.மலர்ச்செல்வனும், அரபாத்தின் கதைகள் பற்றி எழுத்தாளர் பாலைநகர் ஜிப்ரி ஹஸனும் உரைகளை நிகழ்த்தினர்.

வாசகர் வட்டத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், எழுத்தாளர் அறபாத் ஏற்புரையுடன் நூல் அறிமுகம் நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment