அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, April 5, 2018

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது

அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் நால்வர் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வருஸாவ வீதிக்கருகில் வைத்து கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்ற சந்தேகத்தின் பேரிலும் அதேபோல் மார்ச் மாதம் 26 ஆம் திகதி அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீட்டொன்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்ற குற்றச்சாட்டிலும் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நால்வர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

திட்டமிடப்பட்ட குற்றத்தடுப்பு பிரவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் அத்துருகிரிய மற்றும் ஹோகந்தர பிரதேசங்களின் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே 24, 34,36 மற்றும் 37 வயதுடைய அத்துருகிரிய, தல்பே மற்றும் ஹோகந்தர பிரதேசங்களைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு குறித்த நால்வரையும் கைதுசெய்யும் வேளையில் அவர்களிடமிருந்து குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும், ரீ 56 வகையைச் சேர்ந்த துப்பாக்கியொன்றும் துப்பாக்கியின் ரவைகள் 12 உம், மகசின் 1, கத்தி 3, வாள்கள் 3, தலைக்கவசம் 2, பாதுகாப்பு கவசம் 2, கேரள கஞ்சா 2 கிலோ மற்றும் கேரள கஞ்சாவை விற்பனைசெய்து கிடைக்கப்பெற்ற 79800 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் இன்று கடுவெல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திட்டமிடப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment