ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, April 6, 2018

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் மத்தேகொட பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு காஹாதுடுவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

காஹாதுடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்தேகொட பிரதேசத்தில் வைத்து காஹாதுடுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இச்சந்தர்ப்பத்தின் போது 26 வயதுடைய சிங்கபுர ஹோகந்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு குறித்த சந்தேகநபரை கைதுசெய்யும் வேளையில் சந்தேகநபரிடமிருந்து 41 கிராம் 30 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளும் குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த சந்தேகநபர் நேற்று கஸ்பாவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காஹாதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment