வலி. கிழக்கு உப தவிசாளருக்கு கொலை மிரட்டல் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 28, 2018

வலி. கிழக்கு உப தவிசாளருக்கு கொலை மிரட்டல்

நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் அச்சுவேலி தெற்கு வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டி வலி. கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்ட மகேந்திரலிங்கம் கபிலனுக்கு இன்று (28) பகல் தொலைபேசி ஊடாக கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் அவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

வலி.கிழக்கு பிரதேச சபையின் அச்சுவேலி தெற்கு வட்டாரத்தில் முதல்முறையாக போட்டியிட்ட ம.கபிலன் வெற்றிபெற்றார். அவர் சபையின் உப தவிசாளராகவும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

சபையின் கன்னி அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சில தனிப்பட்ட நபர்கள் அதிருப்தியடைந்திருந்ததாகவும், பயிற்றோலை வீதியின் வெள்ளநீர் வடிகால் அமைப்பினை சீர் செய்வது தொடர்பாக சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கும் முகமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக உபதவிசாளர் ம.கபிலன் தெரிவித்தார்.

பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment