பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது சில அரசியல் தலைவர்கள் மாயமாகிப் போனார்கள். கைக்காரர்களும், சேவல் கொடிகாரர்களும், மாயமாய் மறைந்து போனாலும் வீணையும், வீடும் கைகொடுத்ததில் பிரதமர் தனது இலட்சியத்தில் வெற்றியடைந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காத மற்றும் ஆதரவாக வாக்களித்த சுதந்திரக்கட்சி அமைச்சர்களின் விவரம்.
நழுவியவர்கள்
1. நிமல் சிறிபால டி சில்வா
2. ஜோன் செனவிரத்ன
3. மஹிந்த அமரவீர
4. துமிந்த திஸாநாயக்க
5. ரஞ்சித் சியம்பலாபிட்டிய
6. மஹிந்த சமரசிங்க.
7. சரத் அமுனுகம
8. பைசர் முஸ்தபா
9. விஜித் விஜயமுனி சொய்ஷா
பிரேரணையை ஆதரித்து வாக்களித்த அமைச்சர்கள்
1. சுசில் பிரேமஜயந்த
2. அனுரபிரியதர்ஷன யாப்பா
3. எஸ்.பி. திஸாநாயக்க
4. தயாசிறி ஜயசேகர
5. சந்திகம வீரக்கொடி
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறும் வகையிலும், அரசில் அங்கம் வகித்துக் கொண்டே பிரதமருக்கு எதிராக செயற்பட்டதாலும் மேற்படி ஐவரையும் பதவி நீக்குமாறு ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுக்கவுள்ளது.
நழுவிய தமிழ் பேசும் எம்.பிக்கள்
1. ஆறுமுகன் தொண்டமான் எம்.பி.
2. முத்துசிவலிங்கம் எம்.பி.
3. இராஜங்க அமைச்சர் பௌஸி
4. இராஜாங்க அமைச்சர் ஹில்புல்லா
5. காதர் மஸ்தான் எம்.பி.
6. அங்கஜன் எம்.பி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 16 எம்.பிக்களும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். ஐக்கிய தேசியக் கட்சி மீது அதிருப்தியில் இருந்த, அமைச்சுப் பதவியிலிருந்து தூக்கப்பட்ட விஜயதாஸ ராஜபக்ஷவும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளார்.
ரணிலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பாரென அறிவிக்கப்பட்ட பாலித்த ரங்கே பண்டார பிரதமருக்கு ஆதரவளித்தார். அத்துரலிய ரத்தன தேரர் வாக்கெடுப்பை தவிர்த்திருந்தார். ராஜபக்ஷ குடும்பத்திலுள்ள மூன்று வாக்குகளும் பிரதமருக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டன. இறுதி கட்டத்திலேயே மஹிந்த ராஜபக்ஷ சபைக்கு வந்தார்.
விமல் வீரவன்ஸவின் கட்சியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புக்கு தாவிய வீரகுமார திஸாநாயக்கவும், தினேஸின் கட்சியிலிருந்து தப்பிச் சென்ற ஸ்ரீயானி விஜேவிக்கரமவும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
சி.ஐ.டி., எப்.சி.ஐ.டி. ஆகியவற்றின் விசாரணை அறிக்கைகளை சபைக்குள் கொண்டு வந்து, அவற்றிலுள்ள பெயர் விவரங்களை சுட்டிக்காட்டி அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆவேச உரையாற்றியிருந்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ரணில் வென்ற பிறகு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். சபாநாயகர் முடிவை அறிவிப்பதற்கு முன்னரே மஹிந்த அணி. வெளியேறியது.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால அவைக்கு தலைமை தாங்கவில்லை. அவர் உரையாற்றுகையில் ஐ.தே.க.வினர் கடும் கூச்சலில் ஈடுபட்டனர். மூத்த அமைச்சரான மங்கள சமரவீர நேரடி சொற்போரில் ஈடுபட்டார்.
கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஸி சேனாநாயக்க சபாநாயகர் களரியில் அமர்ந்திருந்தவாறு வாக்கெடுப்பை பார்வையிட்டார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறிவதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவின் உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.
இரவு 7 மணிக்கு பிறகு பார்வையாளர் களரி முழுவதும் ஆட்கள் நிரம்பியிருந்தனர். நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டிருந்த போதிலும் வாக்கெடுப்பில் பிரதியமைச்சர் முத்துஹெட்டிகமகே, மஸ்தான் எம்.பி. ஆகியோர் பங்கேற்கவில்லை.
No comments:
Post a Comment