பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு தபால் புகையிரதம் ஒன்று நேற்று (27) அதிகாலை தடம் புரண்டதால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் பல்லேகம எனும் பகுதியில் வைத்து நேற்று அதிகாலை 1.30 மணியளவில் குறித்த ரயில் தடம்புரண்டதாக நாவலப்பிட்டி புகையிரத அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயிலின் மூன்று பெட்டிகளே இவ்வாறு தடம் புரண்டுள்ளன.எனினும் அந்த தபால் புகையிரதத்தில் பயணித்த பயணிகளையும், தபால் பொதிகளையும் வேறொரு ரயிலுக்கு மாற்றி அனுப்பியதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் சில மணி நேரம் பயணிகள் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொண்டமை குறிப்பிடதக்கது.
ரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்பின் மலையக ரயில் சேவைகள் பாதிப்பில்லாமல் தொடரும் எனவும் நேற்று ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment