அதிகாரப்பகிர்வு - கருத்தாடல் பதிவு -1 இற்கான பதிலாக்கம் : வை எல் எஸ் ஹமீட் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 28, 2018

அதிகாரப்பகிர்வு - கருத்தாடல் பதிவு -1 இற்கான பதிலாக்கம் : வை எல் எஸ் ஹமீட்

வழமைபோல் கலந்துரையாடலில் ஈடுபடுவதில் தயக்கம் தெரிகிறது. இருந்தாலும் முயற்சி தொடர்கிறது.

கேள்வி : அதிகாரப்பகிர்வு முஸ்லிம்களுக்கு சாதகமானதா? இது தொடராக வரப்போகும் தலைப்பு. தற்போதைக்கு சுருக்கமான பதில்.

ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு ஒரு அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் அதிகாரம் ஏன் பகிரப்படுகிறது?

பிராந்தியங்களிலுள்ள மக்கள் தமக்கான அரசை / நிர்வாகத்தை ஸ்தாபித்து தம்மைத்தாமே ஆள்வதற்கு. இங்கு பிராந்தியங்கள் என்பது மாகாணங்களாகும்.

இலங்கை அரசின் ஆட்சியாளர்களாக பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். ஜனநாயக நாடுகளின் மரபு அதுதான். எந்த சமூகம் பெரும்பான்மையாக இருக்கின்றதோ அந்த சமூகமே ஆட்சியாளர்களாகவும் இருப்பார்கள்.

சில நாடுகளில் சிறுபான்மைகள் நியாயமாக நடாத்தப்படுவார்கள். சில நாடுகளில் அநீதியாக நடாத்தப்படுவார்கள். அப்பொழுது பிரச்சினைகள் தோன்றும். தனி நாடு கேட்பார்கள். சுயாட்சி கேட்பார்கள். அதிகாரப்பகிர்வு கேட்பார்கள்.

ஏன் கேட்பார்கள்? - பெரும்பான்மையால் ஆளப்பட்டு அவஸ்தைப்படாமல் தங்களைத் தாங்களே ஆள்வதற்கு.

இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஏழு மாகாணங்களில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழுகின்றார்கள். அவர்கள் தாங்களைத் தாங்களே ஆளுவார்கள். வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே ஆளுவார்கள்.

இந்த எட்டு மாகாணங்களிலும் முஸ்லிம்கள் சிறுபான்மை. ஒரு ஆட்சியின்கீழ் முஸ்லிம்கள் அவஸ்தைப்படுவது போதாதென்று எட்டு ஆட்சியின்கீழ் அவஸ்தைப்படுவது நியாயமா?

ஒன்பதாவது மாகாணம் - கிழக்கு : தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்தால் முஸ்லிம்கள் இல்லாமல் ஆட்சி செய்யலாம். இது ஒருபோதும் நடக்காது. என்று கூறமுடியுமா? அப்போது நம்நிலை?

அடுத்த கேள்விக்கான பதில் :
அரச அதிகாரம் மூவகையாக பிரிக்கப்படலாம்.
1. சட்டவாக்க அதிகாரம்
2. நிறைவேற்று அதிகாரம்
3. நீதித்துறை அதிகாரம்

பதிவு - 2 தொடரும்

No comments:

Post a Comment