கண்டி மடவளை பாஸாரை தவிர்ந்த ஏனைய பொது நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குப்பை கழிவுகளை அகற்றாமல் இதுவரை காலமும் இருந்து வந்த பிரச்சினைக்கு பாத்ததும்பரை பிரதேச சபை உறுப்பினர் மடவளை அபு தீர்வினை பெற்றுக் கொடுத்தார்.
இதன் முதற்கட்ட அதிரடி நடவடிக்கையாக மடவளை ஜாமிஊல் ஹைராத் ஜும்மா பள்ளிவாயல் தொடக்கம் ஒவ்வொறு வீடுகள் மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை பிரதேச சபையினால் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை அமுல்ப்படுத்தியுள்ளார்.
2018.04.28 நேற்றுமுதல் குப்பைகள் அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், இனிவரும் காலங்களில் பிரதேச சபை வாகனங்களில் குப்பை கழிவுகள் அகற்றப்படும் என சமூக சேவையாளரும், பாத்ததும்பரை பிரதேச சபை உருப்பினருமான மடவளை அபு தெரிவித்தார்.
No comments:
Post a Comment