10.5 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதி வைப்பிடப்படவில்லை என குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 5, 2018

10.5 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதி வைப்பிடப்படவில்லை என குற்றச்சாட்டு

வட மாகாண போக்குவரத்து துறையில் நிலவும் வெற்றிடங்களுக்கு அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்துறை பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து தலைமை காரியாலயத்துக்கு அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற போக்குவரத்துறை தொடர்பான விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர், சாரதி மற்றும் நடத்துனர் வெற்றிடங்களுக்கு தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்க முடியும் எனக் குறிப்பிட்டார். தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நாளாந்தம் ஆயிரம் ரூபா வேதனத்துடன், மேலதிக கொடுப்பனவும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, 12 போக்குவரத்து பிராந்தியங்களைச் சேர்ந்த போக்குவரத்து பணியாளர்களுக்கு ஊழியர் சேபலாப நிதி வழங்கப்படவில்லை என்றும் சார்ல்ஸ் நிர்மலநாதன் இதன்போது தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க, 10.5 பில்லியன் ரூபாய் ஊழியர் சேமலாப நிதி வைப்பில் இடப்பட்டிருக்கவில்லை. தற்போதைய அரசு அதனை வைப்பிலிட நடவடிக்கை எடுக்கிறது.

இந்த ஆண்டுக்குள் அனைத்து பணியாளர்களுக்கும் ஊழியர் சேமலாப நிதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், வடக்கிற்கு 321 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாகவும், அதனையும் வழங்க இந்த மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படுமா என சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார். அதனை எதிர்வரும் மே மாதத்துக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment