ஒரு மாதத்திற்கு முன்னர் மட்டக்களப்புக்கு நான் வந்த போது எனக்கு வேலையற்ற பட்டதாரிகள் தமது பிரச்சினைகளை முன் வைத்தனர். அப்போது மட்டக்களப்பிலிருந்து பொலனறுவைக்கு நான் எனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தொலைபேசியில் கிழக்கு மாகாண ஆளுனரை தொடர்பு கொண்டு இந்த தேர்தல் முடிவடைந்தவுடன் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படல் வேண்டும் என்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிரீசேனா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று (3) சனிக்கிழமை கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கான ஆசியர் நியமனங்களை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த பைவத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி
வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை கிழக்கு மாகாணத்தில் மாத்திரமல்ல நாடு பூராகவுமுள்ள பிரச்சினையாகும். நாங்கள் ஏழு மாதத்திற்கு முன்னராக பட்டதாரிகளிடமிருந்து அதற்கான விண்ணப்பங்களை கோரினோம். நாங்கள் விண்ணப்பங்களை கோரினாலும் அவர்களுக்கு தேர்தல் காரணமாக நேர்முகப்பரீட்சைகளை நடாத்த முடியவில்லை.
நாடு பூராகவுமுள்ள பட்டதாரிகளின் விண்ணப்பங்களை பரீசிலித்து அவர்களுக்கு விரைவில் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்பதை இந்த சந்தர்பத்தில் கூறி வைக்க விரும்புகின்றேன். அரசாங்கம் வழங்கும் நியமனங்களுக்கு மேலதகிமாகத்தான் மாகாண சபைகள் இப்படியான நியமனங்களை வழங்குகின்றது.
மாகாண சபைகளின் மூலம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் அதே வேளையிலே நாடு பூராகவுமிருக்கின்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் நாங்கள் நியமனங்கள் வழங்குவோம் என்பதனை நான் கூறி வைக்க விரும்பகின்றேன்.
மட்டக்களப்புக்கு நான் வந்ததன் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் எனக்கு ஒரு கடிதத்தினை கொடுத்தார்கள்.
இந்த மாகாணத்திலுள்ள மாகாண அரச சேவை ஆணைக்குழுவுடன் பேசிய விபரங்ளை தெரிவித்திருந்தார்கள். அந்த அரச சேவை ஆணைக்குழுவைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட விடயங்களை அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். மாகாண அரச சேவை ஆணைக்குழு அவ்வாறு செய்திருப்பது கூறியிருப்பது அவர்களுக்குரிய வேலைவயல்ல.
அவர்கள் ஒரு பாரிய தவறை புரிந்துள்ளார்கள். மாகாண அரச சேவை ஆணைக்ழுவுக்கு அப்படியான ஒன்றை சொல்வதற்கு எந்தவிதத்திலும் அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. இப்படியான பேச்சுவார்த்தைகளை நடாத்துவது கூட தவறான விடயமாகும். இந்த அரச சேவை ஆணைக்குழுவை கலைத்து விடுமாறு நான் ஆளுனருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த ஆணைக்குழுவில் தொடர்ந்து 16 வருடங்கள் பணியாற்றுகின்றவர்களும் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். ஆணைக்குழுவின் நியமனங்கள் 3 அல்லது 4 வருடங்களில் மாற்றப்படல் வேண்டும்.
நான் அதுபற்றி ஆளுனருக்கு விஷேட ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். கிழக்கு மாகாண சபை மூலம் நியமனம் வழங்கும் போது அவர்களுக்கு நிதி பற்றாக்குறை இருக்குமானால் அந்த நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் என்பதை கூறி வைக்க விரும்புகின்றேன்.
ஆசியர் நியமனங்களுக்கு மேலதிகமாகவும் வேறு நியமனங்களை வழங்க சபைகளுக்கு அதிகாரம் இருக்கின்றது. பட்டதாரி என்று சொல்வது நாட்டின் பெரியதொரு சொத்து. அவர்களின் கல்வியை நாட்டின் அபிவிருத்திக்கு சரியாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
நாட்டின் எதிர்காலத்திற்கு அவர்களின் அறிவு அவசியமாகும். எங்களின் கல்வி முறையிலுள்ள சில தவறுகள் காரமணாக எங்களது பட்டதாரிகளுக்கு சிலசில போராட்டங்களை நடாத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. அது அந்த பட்டதாரிகளின் தவறல்ல. அது கல்வி முறையிலுள்ள தவறாகும்.
இப்போதிருந்தே இந்த கல்வி முறையினை மாற்ற அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்னறது. ஆசிரியர் தொழில் ஏனைய அரச தொழில்களை விட மிகச் சிறந்த தொழிலாகும் என மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment