அநுராதபுரம் மாவட்டத்தின் கஹட்டகஸ்திஹிலிய பிரதேச சபைக்கான தவிசாளர்/பிரதித் தவிசாளர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று முன்தினம் (29) நடைபெற்றது. அதில் சுயேட்சைக் குழுவினைச் சேர்ந்த திலக் தவிசாளராகவும், பிரதித் தவிசாளராக முஸ்லிம் காங்கிரஸின் நஜீம் ஆசிரியரும் தெரிவானார்கள்.
17 ஆசனங்களைக் கொண்ட கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபையில், வாக்கெடுப்பின் போது ஜேவிபி நடுநிலை வகித்தது. இதன்போது இரு தரப்பினரும் தலா 8 வாக்குகளைப் பெற்றதனால் குலுக்கள் முறையில் தவிசாளரும், பிரதித் தவிசாளரும் தெரிவாகினர்.
நஜீம் ஆசிரியர் அவர்கள் திவுல்வெல வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். இவர் கஹட்டகஸ்திஹிலிய பிரதேச சபைக்குத் தெரிவான ஒரேயொரு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராவார். தான் பிரதித் தவிசாளர் நியமனத்திற்கு ஒன்றையும் பெறவில்லை. பிரதேச மக்களுக்கு சிறந்த சேவைகள் புரியவே நியமனம் பெற சம்மதித்ததாகவும், சிலரால் கூறப்படும் விடயங்களில் எந்தவொரு உண்மையில்லை என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment